அரசியல்

பிரதமரை இழிவுபடுத்தினால், அது நம் நாட்டுக்கே இழிவு!

- விளக்கம் கொடுக்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்

Published:Updated:
பொன்.ராதாகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
பொன்.ராதாகிருஷ்ணன்
Comments
Share

“பிரதமர் மோடியை அவதூறு செய்துவிட்டனர்” என்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு எதிராகத் தமிழக பா.ஜ.க-வினர் பொங்கிக்கொண்டிருக்க... குடியரசு தின அணிவகுப்பில் தங்களது அலங்கார வாகனங்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில்தான் தமிழக பா.ஜ.க-வின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்...

“குடியரசு தின நிகழ்ச்சியில், தமிழகத்தின் அலங்கார ஊர்தியை நிராகரித்துவிட்டது மத்திய அரசு. ஸ்டாலின், பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியும் பலன் இல்லை. இது சுதந்திரப் போராட்டத்தைத் தாண்டிய பெரும் போராட்டமாக இருக்கிறதே?’’

“அலங்கார ஊர்திகளில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்பதை வரைமுறைப்படுத்தி, அனுமதி அளிக்க நிபுணர்குழு உள்ளது. விதிமுறைகளுக்கு உட்படாத ஊர்திகள் அணிவகுப்பில் பங்குபெற முடியாது. இதில் அரசியல் பின்னணி எதுவும் கிடையாது. கடந்தகாலங்களிலும் பல்வேறு மாநிலங்கள் இதுபோல் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.’’