அரசியல்

மிஸ்டர் கழுகு: கட்சியினருக்கு செக் வைத்த ஸ்டாலின்!

மாவட்டச் செயலாளர்களும், மாவட்டப் பொறுப்பாளர்களும் ஏற்கெனவே வேட்பாளர்கள் பட்டியலைத் தயார் செய்து வைத்திருந்தனர். ஆனால், கட்சித் தலைமை அவர்களுக்கு செக் வைத்துவிட்டது. ‘

Published:Updated:
ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்
Comments
Share

கழுகார் நுழைந்தவுடன் அவர் கையில் ஜிலேபியைக் கொடுத்தோம்... “நீர் சொன்னதுபோலவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 20 நாள்களுக்குள் வந்துவிடும் போலிருக்கிறதே... அதற்காகத்தான் ஸ்வீட்...” என்றோம். ஜிலேபியைச் சுவைத்தபடியே உரையாடலைத் தொடங்கினார் கழுகார்...

“மழை, வெள்ளம் அதிருப்தி, பொங்கல் பொருள்கள் குளறுபடி ஆகிய காரணங்களால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிவைக்கவே தமிழக அரசு விரும்பியது. ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், அதற்கு வழியில்லாமல் போகவே உளவுத்துறையை வைத்து ஒரு சர்வே எடுக்கப்பட்டிருக்கிறது. அதில், ‘தற்போது தேர்தல் நடத்தினாலும் 90 சதவிகித வெற்றி உறுதி’ என்று ரிப்போர்ட் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்தே தெம்பாகத் தேர்தல் வேலைகளைத் தொடங்கியிருக்கிறது தி.மு.க அரசு. இது பற்றி அரசியல் கட்சிகளுடன் மாநிலத் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியபோது, ‘மக்கள் பயமில்லாமல் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டுமென்றால், துணைநிலை ராணுவப் பாதுகாப்பு தேவை’ என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்தார்கள். பா.ஜ.க சென்னை மண்டல தேர்தல் பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன், ‘தமிழக முதல்வரின் கொளத்தூர் தொகுதி, அமைச்சர்கள் சேகர் பாபுவின் துறைமுகம் தொகுதி, மா.சுப்பிரமணியனின் சைதை தொகுதி ஆகியவற்றில் கண்டிப்பாக துணைநிலை ராணுவப் பாதுகாப்பு வேண்டும்’ என்று கேட்டிருக்கிறார்.”

“ஓஹோ... தி.மு.க-விலும் உட்கட்சித் தேர்தல் நடக்கிறதாமே?”

“ஊராட்சி, கிளை, ஒன்றியம் ஆகிய பதவிகளுக்கு படிப்படியாகத் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. அடுத்ததாக மாவட்டச் செயலாளர் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஏனெனில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும், சென்னையில் எம்.எல்.ஏ மயிலை வேலு, சிற்றரசு, இளைய அருணா, தேனியில் முன்னாள் எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோரும் இன்னும் மாவட்டப் பொறுப்பாளர்களாகவே தொடர்கிறார்கள். தேர்தல் நடந்தால்தான், மாவட்டச் செயலாளராக முடியும். தவிர, கட்சித் தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் பொதுக்குழு மூலமே தேர்வாகியிருக்கிறார்கள். அந்தப் பதவிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டு, முறைப்படித் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று தி.மு.க கட்சியின் சட்ட விதிகளில் உள்ளது. சில இடங்களில் மாவட்டப் பொறுப்பாளர்களுக்கும், வட்ட, பகுதிச் செயலாளர்களுக்கும் டேர்ம்ஸ் சரியில்லை. தேர்தல் நடந்தால் அடிதடிகூட நடக்கலாம் என்கிறார்கள். இன்னொரு சிக்கல் என்னவென்றால், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை நடந்தது... அப்படி உறுப்பினரான சுமார் 45 லட்சம் பேருக்கு உட்கட்சித் தேர்தலில் போட்டியிடவோ, வாக்களிக்கவோகூட உரிமை இல்லை என்பதும் சட்ட விதியாம்!”